நெல்லை தொகுதியில் சின்னத்தை மட்டும் சொல்லி காங்கிரசுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ..

by Editor / 25-03-2024 09:07:35am
நெல்லை தொகுதியில் சின்னத்தை மட்டும் சொல்லி காங்கிரசுக்கு  வாக்கு சேகரிப்பில் ஈடுபாடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ..

மக்களவை தேர்தலையொட்டி நெல்லை, கன்னியாகுமரி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை மேற்கொள்கிறார். திமுக கூட்டணியில், நெல்லை- கன்னியாகுமரி தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக கை சின்னத்திற்கு முதலமைச்சர் வாக்கு சேகரிக்க உள்ளார் .நெல்லை தொகுதிக்கு காங்கிரஸ் கட்சிசார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் உள்ளதால் சின்னத்தை மட்டும் சொல்லி முதல்வர் வாக்கு சேகரிப்பார் என்று கூறப்படுகிறது. அதே போல், இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லையில் டிரோன், ஆளில்லா விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags : நெல்லைதொகுதியில் சின்னத்தை மட்டும் சொல்லி காங்கிரஸ் க்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபாடும்முதல்வர். 

Share via