அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தல்: ஓ.பி.எஸ்.-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அண்ணா தொழிற்சங்கப் பேரவை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 5 கட்டங்களாக நடைபெறுகிறது.
அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தல்: ஓ.பி.எஸ்.-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்
:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அண்ணா தொழிற்சங்கப் பேரவை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 5 கட்டங்களாக வருகிற 14-ந்தேதி. 22-ந்தேதி. 29-ந்தேதி, அடுத்த மாதம் 7-ந்தேதி மற்றும் 17-ந்தேதி ஆகிய நாட்கள் நடைபெறும். இதற்கான கால அட்டவணை வெளியிடப்படுகிறது.
அதே போல் மண்டலங்கள் மற்றும் பணிமனைகளில் தேர்தல்களை நடத்துவதற்காக, தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பணிமனைகளின் தேர்தல் ஆணையாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
எனவே அண்ணா தொழிற்சங்கங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும், மண்டலங்கள் மற்றும் பணிமனைகளின் நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான தேர்தல்களை முறைப்படி நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.
Tags :