மதிமுக சின்னம் விவகாரம் - அவசர வழக்காக நாளை விசாரணை

by Staff / 25-03-2024 03:37:10pm
மதிமுக சின்னம் விவகாரம் - அவசர வழக்காக நாளை விசாரணை

மதிமுகவுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அக்கட்சி சார்பில் வழக்கு தொடரபட்டது. இது தொடர்பாக 2 வாரத்துக்குள் இறுதி முடிவை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 7 ஆம் தேதி ஆணையிட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று வழக்கை நாளை(மார்ச்26)விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via