தமிழகத்தில் பிரச்னையின்றி தேர்தலை நடத்த முடிகிறது

by Staff / 26-03-2024 02:29:25pm
தமிழகத்தில் பிரச்னையின்றி தேர்தலை நடத்த முடிகிறது

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் எந்த பிரச்னையும் இல்லாமல் தேர்தலை நடத்த முடிகிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய சராசரியைவிட தமிழகத்தில் வாக்களிக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது; வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும். 27 லட்சம் புதிய வாக்காளர் அட்டைகள் வழங்கப்படவுள்ளன என்றார். மேலும் வாக்களிக்கும் மையங்களில் வாக்காளர்கள் செல்போன் கொண்டு வர அனுமதியில்லை என அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via