சிறுமியை திருமணம் செய்து ஏமாற்றிய பூசாரி கைது

by Editor / 03-10-2021 11:43:44am
சிறுமியை திருமணம் செய்து ஏமாற்றிய பூசாரி கைது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பூசாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பகுதியில் வசித்து வரும் பூசாசி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது அண்ணன் மனைவியின் 15 வயது தங்கையுடன் பழகி வந்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு, அவரிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமியின் குடும்பத்தினர் சிறுமிக்கு அவரை திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால், சில நாட்களிலேயே அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தங்கள் மூத்த மகளின் வாழ்க்கை கருத்தில் கொண்டு அந்த சிறுமியின் பெற்றோர் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது அவர் மீது காவல்துறையின் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்தனர்.

 

Tags :

Share via