வேகமாக பரவும் உன்னி காய்ச்சல் - 2 பேர் பலி
திண்டுக்கல்லில் வேகமாக பரவும் உன்னி காய்ச்சலில் 2 பேர் பலியானார்கள். இதையடுத்து மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திண்டுக்கல் மாநகராட்சி சோலைகால் பகுதி மற்றும் காந்திஜி நகர் முதல் தெருவில் ஒருவரென உன்னி காய்ச்சலால் 2 பேர் பலியாகி உள்ளனர். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் புதிய வகை உண்ணி காய்ச்சல்“ஸ்க்ரப் டைபஸ் என்ற இந்த காய்ச்சல் ஒரியண்டா சுட்டுகாமோஷி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாகும். உன்னி காய்ச்சல் என்பது ஒரு வகையான பூச்சி மற்றும் எலிகளால் பரவக்கூடியது என்று சுகாதாரத் துறையின் தெரிவிக்கின்றனர். மேலும் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :