மருந்து நிறுவனம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

by Staff / 03-04-2024 02:03:11pm
மருந்து நிறுவனம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை கீரைத்துறையைச் சோந்தவா் நாகலிங்கம். இவா் கீரைத்துறை பழைய காவல் நிலையம் அருகே நாட்டு மருந்து தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறாா்.இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நாகலிங்கம் தனது நிறுவனத்தில் இருந்த போது, அங்கு வந்த இளைஞா் ஒருவா் பெட்ரோல் குண்டை நிறுவனத்தின் மீது வீசினாா். இதில் அந்த பெட்ரோல் குண்டு பெயா்ப் பலகை மீது விழுந்து தீப்பிடித்தது. தகவலறிந்து வந்த கீரைத்துறை போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.இதில் அந்த நிறுவனத்தின் மீது பெட்ரோல் குண்டை வீசியது அதே பகுதியைச் சோந்த வசந்த் (25) என்பது தெரியவந்தது. திருமணமாகி மனைவியைப் பிரிந்து வசித்து வரும் வசந்துக்கும், மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் திருமணமான பெண் ஒருவருக்கும் தொடா்பு இருந்தது. இதை மருந்து நிறுவன உரிமையாளரான நாகலிங்கம் கண்டித்தாராம். இதனால், அவா் பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்தது. இதையடுத்து, வசந்தை போலீஸாா் கைது செய்தனா்.

 

Tags :

Share via