பாஜக பணம் பறிமுதல் - களத்தில் இறங்கும் வருமான வரித்துறை

by Staff / 07-04-2024 12:53:48pm
பாஜக பணம் பறிமுதல் - களத்தில் இறங்கும் வருமான வரித்துறை

சென்னையில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரயிலில் பயணித்த 3 பேரிடம் இருந்து ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில்பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் விருகம்பாக்கம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் பாஜக பிரமுகரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via