லாரிகள் நேருக்குநேர் மோதல் 2 டிரைவர்கள் படுகாயம்.

by Admin / 07-04-2024 04:27:13pm
லாரிகள் நேருக்குநேர் மோதல் 2 டிரைவர்கள் படுகாயம்.

 கோவில்பட்டி அருகே லாரிகள் நேருக்குநேர் மோதியதில் 2 டிரைவர்கள் படுகாயமடைந்தனர்.நெல்லையைச் சேர்ந்தவர் சுடலைகனி (67). லாரி டிரைவரான இவர், மாலை நெல்லையில் இருந்து சரக்குகள் ஏற்றிக் கொண்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கோவில்பட்டி அடுத்த சாலைபுதூர் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி திடீரென்று லாரி மீது மோதி லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச்சுவரில் ஏறி எதிரே சாத்தூரில் இருந்து நெல்லைக்கு சிமென்ட் லோடு ஏற்றி வந்த லாரியுடன் நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இரு லாரிகளின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது. லாரியை ஓட்டிச் சென்ற சுடலைகனி, சிமென்ட் லாரியை ஓட்டி வந்த கயத்தார் ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை (37) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய  எஸ்ஐ செந்தில்குமார், தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தராஜ் தலைமையில் வீரர்கள் வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இரண்டு லாரி டிரைவர்களையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

லாரிகள் நேருக்குநேர் மோதல் 2 டிரைவர்கள் படுகாயம்.
 

Tags :

Share via