ரோடு ஷோ நடத்தி தமிழக மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது-இபிஎஸ்

by Editor / 10-04-2024 06:33:46pm
ரோடு ஷோ நடத்தி தமிழக மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது-இபிஎஸ்

பாஜக நடத்தி வரும் ரோடு ஷோ குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பொள்ளாச்சியில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், டெல்லியில் இருந்து நேராக விமானத்தில் வந்து தலைவர்கள் இறங்குகிறார்கள். ரோடு ஷோ நடத்துகிறார்கள் ரோட்டில் பயணம் செய்வதால் என்ன பிரயோஜனம்? அதனால் மக்கள் வாக்களித்து விடுவார்களா? எத்தனை தலைவர்கள் வந்து சென்றாலும், பேட்டி கொடுத்தாலும் தமிழக மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது” என விமர்சித்துள்ளார்.

 

Tags : இபிஎஸ்

Share via