வரதட்சணையால் தற்கொலை செய்த பெண் மருத்துவர்: நீதிமன்றம் உத்தரவு

by Staff / 11-04-2024 12:25:55pm
வரதட்சணையால் தற்கொலை செய்த பெண் மருத்துவர்: நீதிமன்றம் உத்தரவு

கேரளாவை சேர்ந்த மருத்துவர் ஷகானாவுக்கும், மருத்துவர் ரூவைஸ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ரூவைஸின் பெற்றோர் அதிக வரதட்சணை கேட்டுள்ளனர். அதைக் கொடுக்க முடியாததால் ஷகானாவின் திருமணம் நின்றது. பின்னர் அதிக டோஸ் மயக்க ஊசி செலுத்தி ஷகானா கடந்தாண்டு தற்கொலை செய்தார். தற்கொலைக்கு தூண்டியதாக கைதான ரூவைஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதையடுத்து மீண்டும் படிப்பை தொடர அனுமதிக்குமாறு நீதிமன்றத்தை நாடினார். இதில் மனுதாரரை மீண்டும் சேர்த்துக் கொள்ள இந்திய மருத்துவ சங்கத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

Tags :

Share via