மத்திய அமைச்சர் நாக்கை அறுத்து வருபவர்களுக்கு ரூ.11 லட்சம்

by Staff / 15-04-2024 12:47:03pm
மத்திய அமைச்சர் நாக்கை அறுத்து வருபவர்களுக்கு ரூ.11 லட்சம்

அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா பேசுகையில், நாட்டை ஆண்ட மகாராஜாக்கள் வௌிநாட்டு ஆட்சியாளர்கள், ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து அவர்களின் பெண்களை திருமணம் செய்து கொடுத்ததாக கூறினார். ரூபாலாவின் பேச்சுக்கு ராஜபுத்திர சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிதனர். இப்பிரச்சனை அம்மக்கள் அதிகம் வாழும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜகவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ஜம்முவை சேர்ந்த ராஜ்புத் சமூக இளைஞர் அமைப்பு ஒன்று ரூபாலாவின் நாக்கை அறுத்து வருவோருக்கு ரூ.11 லட்சம் பரிசு அறிவித்துள்ளது.

 

Tags :

Share via