தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்த மருத்துவர்

by Staff / 16-04-2024 04:48:43pm
தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்த மருத்துவர்

சிவில் சர்வீஸ் தேர்வில் சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவரான மருத்துவர் பிரசாந்த் தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் 78வது இடம் அவருக்கு கிடைத்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை முடித்த பிரசாந்த் எட்டு மாதங்களில் சொந்த முயற்சியில் தீவிரமாக படித்து, தேர்வு எழுதிய முதல் முறையிலேயே தமிழ்நாட்டு அளவில் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

 

Tags :

Share via