இன்று கருணாநிதி 3வது ஆண்டு நினைவு நாள்-மு.க ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி

by Editor / 07-08-2021 09:02:43am
இன்று கருணாநிதி 3வது ஆண்டு நினைவு நாள்-மு.க ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்பி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். திமுக தொண்டர்கள் அவரவர் வீட்டில் இருந்தே மரியாதை செலுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தின் மூத்த தலைவர், மிகச்சிறந்த எழுத்தாளர், 5 முறை முதல்வராக இருந்து சாதனை படைத்த திமுக தலைவர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஓய்வறியா சூரியனாக பயகருணாநிதி 3வது ஆண்டு நினைவு நாள்கருணாநிதி 3வது ஆண்டு நினைவு நாள்ணித்த மூத்த தலைவர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி ஓய்வெடுத்த நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் உடளள கருணாநிதியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காலையில் கருணாநிதி நினைவிடத்திற்கு வந்த மு.க ஸ்டாலின், கனிமொழி எம்பி, தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, டி.ஆர் பாலு மற்றும் மூத்த அமைச்சர்கள் நேரில் வந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தி வணங்கினர்.

 

Tags :

Share via