நண்பனின் மனைவிக்காக நண்பனையே நண்பனின் மனைவியோடு சேர்ந்து கொலை செய்த கும்பல்.

by Editor / 24-04-2024 09:32:05am
நண்பனின் மனைவிக்காக நண்பனையே நண்பனின் மனைவியோடு சேர்ந்து கொலை செய்த கும்பல்.

ராமநாதபுரம்பகுதியை சேர்ந்த ஆர்த்தி என்பவருக்கும் அவரது கணவர் ஸ்ரீகாந்த்தின் நண்பர் இளையராஜாவுக்கும் இடையே 2021ஆம் ஆண்டு கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனைக் கண்டித்த கணவரை, ஆர்த்தி, இளையராஜா அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்து புதைத்தனர். குடும்ப தகராறு காரணமாக தனது கணவர் வெளியூர் சென்றிருப்பதாக ஆர்த்தி ஊருக்குள் கூறி வந்துள்ளார். இந்நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டதை அறிந்த போலீசார் ஆர்த்தி, இளையராஜா அவரது நண்பர்களை நேற்று கைது செய்துள்ளனர்.கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.

 

Tags : நண்பனின் மனைவிக்காக நண்பனையே நண்பனின் மனைவியோடு சேர்ந்து கொலை செய்த கும்பல்.

Share via