விளையாடி கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

by Staff / 24-04-2024 01:01:01pm
விளையாடி கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செவலூரில் வசித்து வரும் தயாநிதி மொண்டிப்பட்டி டிஎன்பிஎல் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது நான்கரை வயது மகன் கனகவேல் நேற்று பிற்பகலில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பக்கவாட்டில் இருந்த தண்ணீர் தொட்டியின் பக்கவாட்டு சுவர் திடீரென சிறுவன் மீது இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த கனகவேல், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து  வந்த போலீஸார், சிறுவனின் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via