செய்தி சானல் ஒளிப்பதிவாளர் காட்டு யானை தாக்கி பலி
கேரளாவின் பாலக்காட்டில் மாத்ருபூமி செய்தி தொலைக்காட்சியைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஏவி முகேஷ் (34) காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார். கொட்டேகாடு பகுதியில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது காட்டு யானைகள் ஆற்றைக் கடப்பதைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. பலத்த காயம் அடைந்த அவர் பாலக்காடு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
புகைப்படம் எடுத்தல் தவிர, முகேஷ் mathrubhumi.com இல் 'அதிஜீவனம்' என்ற தலைப்பில் பிரபலமான கட்டுரையை எழுதுகிறார். டெல்லியில் நீண்ட காலம் பணியாற்றிய பிறகு, கடந்த ஆண்டு பாலக்காடு செய்தி அலுவலகத்தில் சேர்ந்தார்.
Tags :