கடலுாரில் பரவலாக மழை

by Editor / 15-08-2021 10:49:44am
கடலுாரில் பரவலாக மழை

கடலுாரில் நேற்றிரவு சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.தென்மேற்கு பருவ காற்று மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலுார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. மாலை 6:30 மணியளவில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் ஓடியது. மாவட்டத்தில் பண்ருட்டி, விருத்தாசலம், தொழுதுார், கீழ்செருவாய், குப்பநத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

 

Tags :

Share via