ஹிமாசல் நிலச்சரிவில் அனைத்து உடல்களும் மீட்கப்பட்டன

by Editor / 18-08-2021 10:02:58am
ஹிமாசல் நிலச்சரிவில் அனைத்து உடல்களும் மீட்கப்பட்டன

ஹிமாசலப் பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த அனைவரது உடலும் மீட்கப்பட்டதாக மாநில பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

ஹிமாசலப் பிரதேச மாநிலம் கின்னெளரில் கடந்த 11-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மற்றும் சில வாகனங்கள் சிக்கிக் கொண்டன.

தேசிய பேரிடா் மீட்புப் படை, இந்தோ-திபெத் எல்லை காவல் படை, காவல் துறை மற்றும் ஊா்க்காவல் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். முதல் நாளில் 13 போ உயிருடனும், 10 போ சடலமாகவும் மீட்கப்பட்டனா்.

கடந்த வாரம் வியாழக்கிழமை 4 சடலங்கள் மீட்கப்பட்டன. வெள்ளிக்கிழமை மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் 6 பேரின் சடலங்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டன.

மேலும், 9 பேரின் சடலங்களை மாநில பேரிடர் மீட்புப் படையினர் தேடி வந்த நிலையில், இன்று அனைவரது உடலும் மீட்கப்பட்டதாக அறிவித்துள்ளது.

 

Tags :

Share via