விஜயகாந்துடன் நான் இருந்திருந்தால் முதலமைச்சராகியிருப்பார்... மன்சூர்அலிகான் பேட்டி...

by Admin / 25-08-2021 04:56:42pm
விஜயகாந்துடன் நான் இருந்திருந்தால் முதலமைச்சராகியிருப்பார்... மன்சூர்அலிகான் பேட்டி...

 

விஜயகாந்துடன் நான் இருந்திருந்தால் முதலமைச்சராகியிருப்பார் என்று மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
 
நடிகரும் , தமிழ்த் தேசிய புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

" விஜயகாந்த் திரையுலகில் பிரபலம் அடைவதற்கு முன்பே ராஜபாதர் தெருவில் உள்ள தனது வீட்டில் பல உதவி இயக்குநர்களுக்கு உணவளித்தவர்.  பல கலைஞர்களை உருவாக்கியவர். நடிகர்கள் பொதுவாக கதாநாயகிகளை மட்டுமே அறிமுகம் செய்வர். ஆனால்  செல்வமணி , சரத்குமார், பாக்யராஜ், ரோஜா போன்ற நடிகர்களையும்  நடனக் கலைஞர்கள் , சண்டைக்காட்சி நிபுனர்களையும் உருவாக்கியவர் விஜயகாந்த்.

எம்ஜிஆர் , சிவாஜி , எம்.ஆர்.ராதாவின் பானி இல்லாமல் தனக்கென தனி பானியை உருவாக்கியவர். விஜயகாந்த்துடன் அரசியலில் இணைந்து பயணிக்க முடியாதது வருத்தமே.

 
விஜயகாந்தை சந்தித்தேன் , என்னை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். திமுக ஆட்சியின் செயல்பாடு குறித்து இங்கு பேச விரும்பவில்லை.

விஜயகாந்த் முதலமைச்சராகியிருக்க வேண்டும். வசன கர்த்தா லியாகத் அலிகான்  , மன்சூர் அலிகான் எனும் இரண்டு கான்களும் அவருடன் இணைந்து பயணித்திருந்தால் விஜயகாந்த் இப்போதும் முதலமைச்சராக இருந்திருப்பார்.

கொடநாடு வழக்கில் தவறு செய்தவர்கள் தண்டனை கட்டாயம் அனுபவித்தே ஆக வேண்டும். ஆட்சிக்கு வருபவர்கள் சொல்வதை கட்டாயம் செய்ய வேண்டும். கொரோனா என்பது இல்லை. அதை வைத்து ஏமாற்றுகின்றனர் " என்று கூறினார்.

 

Tags :

Share via