சாராய வியாபாரி மகனை வைத்து மிரட்டல்... பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது பெண் புகார்...

by Admin / 28-08-2021 12:41:41pm
சாராய வியாபாரி மகனை வைத்து மிரட்டல்... பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது பெண் புகார்...

பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுவதாக ராதிகா என்ற பெண் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.

 புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா வெள்ளாளவயலை சேர்ந்த கூத்தையா மகள் ராதிகா இவர். குடும்ப சூழ்நிலை காரணமாக பெருமாள் மகன் ராமன் என்பவரது கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். ராமனின் நடவடிக்கை சரியில்லாததால் வேலையை விட்டு நின்று விட்டு வேறு கடைக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

ஆனால் ராதிகா எங்கு சென்றாலும், ராமன் பின்தொடர்ந்து தொலைக் கொடுத்து வந்துள்ளார். மேலும் வெள்ளாளவயலை சேர்ந்த கூலிப்படை சாராய வியாபாரியின் மகன் ரஜினியை மூலமாக ராதிகா குளிக்கும் இடம், தண்ணீர் எடுக்கப் போகும் இடங்களில்  போட்டோ எடுத்து கூலிப்படையை வைத்து மிரட்டியிருக்கிறார். இது சம்பந்தமாக 30.06. 2021 இவர்கள் இருவர் மீதும் ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

 
இதில் ரஜினி பெயரை நீக்கம் செய்துவிட்டு புதிதாக வேறு புகாரை வாங்கி உள்ளனர் போலீசார். அதன்படி ராமனை கைது செய்யாமல் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதன் பிறகு ராமன், ராதிகா செல்லும் இடங்களில் எல்லாம் கூலிப்படை ரஜினியுடன் சென்று தகாத வார்த்தைகளை பேசி, கையை பிடித்து இழுத்தும் தொந்தரவு கொடுத்து வந்திருக்கின்றார்கள்.
மேலும், ஆவுடையார்கோவில் காவல் நிலையம்  எனக்கு சொந்தவீடு போல என்றும், ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் எல்லாமே எனக்கு வேண்டியவர்கள் தான் மேலும் நீ வேலைக்கு செல்லும் சென்று வரும் வாகனங்களில், ஆயுதங்கள் வைத்தும் என்னை விபச்சாரி என்று கூறியும் என் மீது வழக்குப் போடுவேன் என்று இராமன் பேசியிருக்கிறார்.

இதனையடுத்து, ராமன் மீதும், ரஜினி மீதும் ராதிகா புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். அதில் மேற்கண்ட சம்பவங்களை பற்றியும், ராமன் பேசிய அவதூறு பேச்சுக்கள் அடங்கிய ஆடியோ சிடியையும்  சேர்த்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கணவனை பிரிந்து வாழும் ராதிகா மற்றும் அவருடைய ஐந்து வயது மகளுக்கும் தகுந்த பாதுகாப்பும் என் மீது மிரட்டும் ரஜினி மற்றும் ராமன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு வழங்கினார் .

 

Tags :

Share via