இந்தியா வல்லரசாக என்ன செய்ய வேண்டும்... மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் ஐடியா...

by Admin / 28-08-2021 02:12:56pm
இந்தியா வல்லரசாக என்ன செய்ய வேண்டும்...  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் ஐடியா...

தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்தால் இந்தியா வல்லரசாக முடியும் என ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு சொந்தமாக புனேயில் உள்ள ராணுவ உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

அங்குள்ள மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றும்போது, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பின் வளர்ச்சிப்பாதையில் நாட்டை கொண்டு செல்ல பிரதமர் மோடி உறுதிபூண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஆயுதப்படைகள், தொழில் துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சிகள் மூலம் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் முன்னேற்றம் அடைய பாதுகாப்பு அமைச்சகத்தால் சில முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்தால், இந்தியா வல்லரசாக முடியும் என்பதுதான் தனது கருத்து என்றும், அத்துடன் பொருளாதார வல்லரசாகவும் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via