சுற்றுலாத்தளங்களில் தடுப்பூசி போடும் பணி தீவிரம்! அமைச்சர் தகவல்  

by Reporter / 29-08-2021 06:07:42pm
சுற்றுலாத்தளங்களில் தடுப்பூசி போடும் பணி தீவிரம்! அமைச்சர் தகவல்  



தமிழகத்தில் சுற்றுலா தளங்களாக உள்ள திருவண்ணாமலை, நாகூர், வேளாங்கன்னி போன்ற இடங்களில் 100% தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 அதேபோல் கொடைக்கானல் நகராட்சி 100% தடுப்பூசி செலுத்தி உள்ளது என்கிற நிலையை அடைந்துள்ளதாகவும், பழனி ஓரிரு நாட்களில் 100% தடுப்பூசி என்கிற இடத்தை அடைய உள்ளதாகவும் அவர் கூறினார்.
 
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள், முதியவர்கள் மற்றும் விதவைகள் ஆகியோருக்கான அரசின் உதவித் தொகைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, மாந்தோப்பில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்,  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அப்போது சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெயராணி, கிண்டி, மாம்பலம் மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதி வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில், 7 லட்சத்து 76 ஆயிரத்து, 209 மதிப்பிலான நலத்திட்டங்கள் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் ஓய்வூதிய ஆதரவற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்குவதில் கடந்த ஆட்சி பல்வேறு விதிமுறைகளை பிறப்பித்ததால் ஏழரை லட்சம் பேர் அதனால் பாதிப்பு அடைந்தனர். தற்போது அவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்கும் பணிகள் தொடங்கி நடைபெறுபவதாக கூறினார்.

தமிழகத்தில் பல தரப்பினருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறிய அவர், கொடைக்கானல் நகராட்சி 100% தடுப்பூசி செலுத்தி உள்ளது என்கிற நிலையை அடைந்துள்ளதாகவும்,

 பழனி ஓரிரு நாட்களில் 100% தடுப்பூசி என்கிற இடத்தை அடைய உள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல் தமிழகத்தில் சுற்றுலா தளங்களாக உள்ள திருவண்ணாமலை, நாகூர், வேளாங்கன்னி போன்ற இடங்களில் 100% தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சுற்றறிக்கை சுகாதாரத்துறை மூலமாக அனுப்பப்பட்டு இன்று முதல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் 1ம் தேதி பள்ளி,கல்லூரிகள் திறக்க உள்ளதால், ஆசிரியர்கள் 1 தவணை செலுத்தி இருந்தாலே பணிக்கு வரலாம் என்றும், ஆனால் அதுமட்டும் போதுமானது இல்லை கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

Tags :

Share via