ஓபிஎஸ் மனைவி மரணம்:முதல்வர் மு.க.ஸ்டாலின், சசிகலா அஞ்சலி

by Editor / 01-09-2021 01:37:26pm
ஓபிஎஸ் மனைவி மரணம்:முதல்வர் மு.க.ஸ்டாலின், சசிகலா அஞ்சலி

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரு வாரங்களாக சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதன்கிழமை காலை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்

இதையடுத்து மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள விஜயலட்சுமியின் உடலுக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை பிடித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினாரமருத்துவனையில் விஜயலட்சுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிலையில், சசிகலாவும் மருத்துவமனைக்கு நேரில் சென்று விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர், ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தார். ஓபிஎஸ் கண் கலங்கியபோது, அவரது கைகளைப் பிடித்து சசிகலா ஆறுதல் தெரிவித்தார்.

விஜயலட்சுமியின் உடல் இன்று தேனி மாவட்டம் பெரியகுளத்திற்குக் கொண்டுவரப்பட்டு நாளை (செப். 02) அடக்கம் செய்யப்பட உள்ளது

 

Tags :

Share via