ஒரே நாளில் 2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தி சாதனை

by Editor / 17-09-2021 07:43:06pm
ஒரே நாளில் 2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தி சாதனை

இந்தியாவில்இன்றுஒரே நாளில் கோடி க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு முன் ஒரு கோடி தடுப்பூசி ஒரே நாளில் செலுத்தப்பட்டிருந்தாலும் 2 கோடி என்ற எண்ணிக்கையை எட்டியதில்லை, அதை அடைய ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்தது. இந்த நிலையில், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் " பிரதமர் மோடிக்கு பிறந்தநாள்.

அவருக்கு மிகச்சிறந்த பரிசாக அமையும் வகையில் தடுப்பூசி செலுத்தாத உங்கள் அன்புக்குரியவர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துங்கள்.இதுதான் பிரதமர் மோடிக்கு சிறந்த பரிசாக அமையும் எனத் தெரிவித்து இருந்தார்.

அதன்படி இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 2 கோடியை தாண்டியுள்ளது. ஒரேநாளில் நாடு தழுவிய அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதில் இதுவே அதிகபட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via