9 மாவட்டங்களில் எடப்பாடி சுற்றுப்பயணம்

by Editor / 22-09-2021 04:24:39pm
9 மாவட்டங்களில் எடப்பாடி சுற்றுப்பயணம்


உள்ளாட்சி தேர்தலில் அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெறுவது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்க 9 மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி  சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக 9 மாவட்டங்களுக்கும் சென்று அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். நாளை காலை அவர் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட அண்ணா தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற எவ்வாறு பாடுபடுவது என்பது குறித்து ஆலோசனைகளை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்க உள்ளார்.


 வெள்ளிக்கிழமை 24 -ந் தேதி மதுரை சென்று அங்கிருந்து கார் மூலம் சங்கரன்கோவில் செல்கிறார். அங்கு தென்காசி மாவட்ட அண்ணா தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அந்தகூட்டம் முடிந்ததும் திருநெல்வேலி செல்கிறார்.
திருநெல்வேலி கே.டி.சி.நகர் மாதா மாளிகையில் நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசிக்கிறார். இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற தேவையான ஆலோசனை வழங்குகிறார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.


இந்த கூட்டம் முடிந்ததும், சென்னை திரும்பும் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை மாலை காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.


அதன்பிறகு திங்கட்கிழமை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 9 மாவட்டங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று கட்சி நிர்வாகிகளை சந்திக்க உள்ளதால், உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது

 

Tags :

Share via