நெல்லை அருகே கல்குவாரி வெடித்து  வீடு இடிந்து 3 வயது சிறுவன் பலி

by Editor / 22-09-2021 07:01:54pm
நெல்லை அருகே கல்குவாரி வெடித்து  வீடு இடிந்து 3 வயது சிறுவன் பலி

 


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இராதாபுரம் அருகேயிருக்கும் கிராமம் சீலாத்திக்குளம். இந்த கிராமத்தை சார்ந்தவர் முருகன். இவரது மனைவி சுகன்யா. முருகன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு 3 வயதுடைய ஆகாஷ் என்ற மகன் இருக்கிறார்.

இராதாபுரம் சுற்றுவட்டார பகுதியில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அங்குள்ள ஒரு கல்குவாரியில் பாறையை உடைக்க வெடிவைத்து பாறைகள் தகர்க்கப்பட்ட நிலையில், வெடியின் வீரியம் காரணமாக சீலாத்திகுளத்தில் உள்ள வீடுகள் அதிர்ந்துள்ளது.மேலும், 10 க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்கள் சேதமடைந்த நிலையில், முருகனின் வீட்டு சுவரும் சேதமாகியுள்ளது. வீட்டின் உள்ளே முருகனின் மகன் ஆகாஷ் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், சுகன்யா அருகே தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார்.

வெடி அழுத்தத்தால் அதிர்ந்த சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த முருகன் - சுகன்யா தம்பதியின் மகன் ஆகாஷ் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்து இருக்கிறான். இந்த விஷயம் முருகனுக்கு தெரிவிக்கப்பட்டு, ஊர் மக்கள் திரண்டு வந்து சிறுவனின் உடலை மீட்டுள்ளனர்.இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த இராதாபுரம் காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

 

Tags :

Share via