மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு  12 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

by Editor / 28-09-2021 02:59:00pm
மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு  12 ஆயிரம் கன அடி நீர் திறப்பு



மேட்டூர் அணை நீர் திறப்பு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 7 ஆயிரத்து 50 கன அடியாக இருந்தது. இன்று (செப். 28) நீர்வரத்து விநாடிக்கு 9,875 கன அடியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி வரை டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதமும், மேட்டூர் அணை கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 800 கன அடி வீதமும் நீர் திறக்கப்பட்டு வந்தது.


இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழை குறைந்துள்ளதால், அங்கு பாசனத்துக்கு நீர் தேவை அதிகரித்துள்ளது. எனவே, இன்று காலை 9 மணி முதல் டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.49 அடியாக இருந்த நிலையில், அணையின் நீர் மட்டம். 73.67 அடியாக உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via