வாகன சோதனையில் 1.54 கோடி பணம் பறிமுதல்
சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் , கொடுங்கையூர் போலீசார் எருக்கஞ்சேரி பகுதியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் , வெற்றி வேந்தன் மற்றும் தலைமை காவலர் கணபதி ஜி.என். டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக சென்ற TN 66 D 4981 எண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி தணிக்கை செய்யும் பொழுது பின்னால் இருந்த நபர் சந்தேகப் படும்படியாக இருந்ததால் போலீஸார் அவரை விசாரித்தனர்.
அவரிடம் பணப்பைகள் இருந்ததால் உடனடியாக கொடுங்கையூர் குற்றப் பிரிவு ஆய்வாளர் ராஜனுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அந்த வாகனத்தை கொடுங்கையூர் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில் , அந்த பணப்பையில் 1 கோடியே 54 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்
Tags :