மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மதிப்பெண் சான்று

by Editor / 05-12-2021 11:33:25am
 மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மதிப்பெண் சான்று

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்வழங்க அரசு தேர்வுகள் துறை இயக்ககம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டில் எளிதில் கிழியாத, நீரில் சேதமடையாத வகையில் செயற்கை இழையால் மேம்படுத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்திற்கு  10 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்படும் என்றும் கவித்துறை தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via