கல்லூரி மாணவி தற்கொலை போலீஸ் விசாரணை

by Staff / 19-11-2023 03:24:26pm
கல்லூரி மாணவி தற்கொலை போலீஸ் விசாரணை

மதுரை ஆரப்பாளையம் கண்மாய்க்கரையை சேர்ந்தவர் பொன்ராஜ் பாண்டி இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் இலக்கிய 22 மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் எம். காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவர் அதற்கான சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கல்லூரிக்கு சென்று விட்டு வந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via