குன்னுார் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 5பேர் பலி,மற்றவர்களை தேடும் பணிகள் தீவிரம்

by Editor / 08-12-2021 02:50:58pm
 குன்னுார் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 5பேர் பலி,மற்றவர்களை தேடும் பணிகள் தீவிரம்

நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி உள்ளது. இந்த பயிற்சி கல்லூரியில் இன்று நடக்கவிருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி புறப்பட்டுள்ளனர்.

ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் எனும் பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது கடும் மேகமூட்டமான கால நிலை நிலவியது. இதனால்,  காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர்  பைலட் கட்டுப்பாட்டை இழந்து 12.10 மணியளவில் மரத்தில் மோதி விழுந்து எரிந்தது. இதில்5 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. 2பேர்  உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டு குன்னுார் ராணுவ மருத்துவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்றவர்களின்  நிலை என்னவானது என தெரியவில்லை.

மீட்கும் பணி தொடர்ந்து நீடிக்கிறது. சம்பவ இடத்தில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நீலகிரி கலெக்டர் அம்ரித், எஸ்.பி.,ஆசிஸ் ராவத், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் மீட்பு பணியினை விரைவுப்படுத்திஉள்ளனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 குன்னுார் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 5பேர் பலி,மற்றவர்களை தேடும் பணிகள் தீவிரம்
 

Tags :

Share via