நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை கொடியேற்றம் நடைபெற்றது

by Editor / 11-12-2021 11:42:03am
நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை கொடியேற்றம் நடைபெற்றது

நெல்லை அருள்தரும் அன்னைகாந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு திருவனந்தல் வழிபாடுடன் திருவாதிரைத் திருவிழாவுக்காக கொடியேற்றம்  நடைபெற்றது.முன்னதாக கோவில் அர்ச்சகர்கள் கொடிகம்பத்திற்க்கு அபிஷேகம் செய்து தீபாரதனை காட்டி துவங்கினர்.இந்நிகழ்ச்சியின் போது சிவனடியார்கள் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
 

 

Tags :

Share via