டெபாசிட் இழந்தார் பிரேமலதா விஜயகாந்த்!
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இதனிடையே திமுக, அதிமுக கூட்டணி தவிர மற்ற கட்சிகள் ஒரு தொகுதயில் கூட வெற்றி பெறவில்லை. ஐந்து முனைப்போட்டி நடைபெற்ற நிலையில் அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் முதலில் பேச்சுவார்த்தை நடத்திய விஜயகாந்தின் தேமுதிக , அதன்பின் அந்த கூட்டணியில் இடம் கிடைக்காமல் அனைத்து கூட்டணியும் ஒதுக்கப்பட்ட நிலையில் கடைசியில் வேறு வழியில்லாமல் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணியுடன் இணைந்து 60 தொகுதிகளில் போட்டியிட்டது. விருத்தாச்சலம் விஜயகாந்த் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால் பிரேமலதா அந்த தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அங்கு பிரேமலதா டெபாசிட் இழந்துள்ளார். விருத்தாச்சலம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். பாமக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
Tags :