ஆலங்குளம் அருகே அரசு பேருந்து மோதி 10 மாத குழந்தை, இளம்பெண் பலி.

by Editor / 26-02-2024 07:07:29pm
ஆலங்குளம் அருகே அரசு பேருந்து மோதி 10 மாத குழந்தை, இளம்பெண் பலி.

 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கீழகரும்புளியூத்து கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் வயது (28)என்பவர் தனது உறவினர் மாரி (19) அவரது தோழி பானுப்பிரியா வயது (18 )மற்றும்  மாரியின் 10 மாத குழந்தை கவி ஸ்ரீ ஆகியோருடன் ஒரே பைக்கில் நெல்லை தென்காசி நான்கு வழிச்சாலையில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு சாலையை கடக்க முற்பட்ட பொழுது   பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதில் குழந்தை கவிஸ்ரீ மற்றும் பானுப்பிரியா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். ராமகிருஷ்ணன், மாரி ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இருப்பினும் படுகாயம் அடைந்தவர்களை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 10 மாத குழந்தை கவிஸ்ரீயும், பானுப்பிரியாவும்  பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : அரசு பேருந்து மோதி 10 மாத குழந்தை, இளம்பெண் பலி.

Share via