28 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்கு காரில் ஏற்றி வந்த 3 பேர் கைது

by Editor / 20-12-2021 09:11:45pm
28 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்கு  காரில் ஏற்றி வந்த 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவின்பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ்  மேற்பார்வையில் எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில் வேல்முருகன், தலைமை காவலர் குருசாமி ராஜா, காவலர்கள் பாண்டியராஜன் மற்றும் முத்துமுருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் ,எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருங்குளம் விலக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக வந்த  காரை  நிறுத்தி சோதனை செய்ததில், அதில் இருந்த 1) மாரியப்பன் (33), த/பெ. பாலசுப்ரமணியன், பெரியார் நகர், குளத்தூர், 2) பொன்னுத்துரை (36) த/பெ.  பெத்துபாண்டி, நடுத்தெரு, குளத்தூர், மற்றும் 3) அப்பணசாமி (43) த/பெ.  முத்துச்சாமி நடுத்தெரு, அருங்குளம் ஆகிய 3 பேரும் சேர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரிகள் 3 பேரையும் கைது செய்து ரூபாய் 30 ஆயிரம் மதிப்பிலான 28 கிலோ புகையிலைப் பாக்கெட்டுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும்  பறிமுதல் செய்தனர்.
 

 

Tags :

Share via