வேர்கடலைகாரரிடம் பெற்ற ரூ.25 கடனை 12 ஆண்டுகளுக்கு பிறகு வட்டியுடன் கொடுத்த வாலிபர்.

by Writer / 03-01-2022 09:20:19pm
வேர்கடலைகாரரிடம் பெற்ற ரூ.25 கடனை 12 ஆண்டுகளுக்கு பிறகு வட்டியுடன் கொடுத்த வாலிபர்.

ஆந்திரா மாநிலம் காக்கி நாடாவை சேர்ந்தவர் மோகன் அவர் கடந்த 2010-ம் ஆண்டு தனது மகன் பிரவீனுடன் காக்கிநாடாவில் உள்ள  கடற்கரைக்கு சென்றபோது அங்கு  வேதசத்தைய்யா என்பவர் சைக்கிளில் வேர்க்கடலை விற்றுக்கொண்டிருந்தார். அப்போது மோகன் என்பவரின் மகன் பிரவீன் வேதசத்தைய்யாவிடம் ரூ.25-க்கு வேர்க்கடலை வாங்கியுள்ளார்

தந்தை மோகனிடம் சில்லரை இல்லாததால் வேர்க்கடலை பொட்டலத்தை பிரவீன் திருப்பி வேதசத்தைய்யா விடம் கொடுத்தபோது வேதசத்தைய்யா, பணத்தை நாளைக்கு வந்து கொடுங்கள் என்று கூறியுள்ளார்


மோகனும் அவரது மகன் பிரவீனும் மறுநாள்  கடற்கரைக்கு சென்றபோது வேதசத்தையா வரவில்லை. அதன்பின்பு  மோகன், தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுவிட்டார். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து காக்கிநாடாவுக்கு வந்த பிரவீன், வேதசத்தையாவிடம் வாங்கிய ரூ.25 கடனை திருப்பி கொடுக்க விரும்பினர். இதற்காக காக்கிநாடா கடற்கரைக்கு சென்று வேதசத்தையாவை தேடியபோது அவர் கிடைக்கவில்லை

இதுகுறித்து பிரவீன் தனது உறவினரும் காக்கிநாடா எம்.எல்.ஏ.வுமான சந்திர சேகரிடம் தெரிவித்துள்ளார் மேலும் வேதசத்தையாவுடன் பிரவீன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வேதவத்தையாவை தேடியுள்ளார்கள்

ஆனால் அதை பார்த்த சிலர் வேதசத்தையா இறந்துவிட்ட தகவல் தெரியவந்துள்ளது அதனை அடுத்து அவரது மனைவியை எம்.எல்.ஏ. வீட்டுக்கு பிரவீன் வரவழைத்து வேதசத்தையாவிடம் தான் 12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ரூ.25-க்கு வட்டியுடன் சேர்த்து ரூ 23 ஆயிரமாக திருப்பி கொடுத்துள்ளார்

 

Tags :

Share via