70 லட்சம் மதிப்புடைய 1.55 கிலோ தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து இண்டிகோ பயணிகள் சிறப்பு விமானம், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு ஆண் பையணி, நீ எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் ஒன்று துபாயிலிருந்து வாங்கி வந்திருந்தாா்.
அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்த எலக்டிரிக் ரைஸ் குக்கரை திறந்து பார்த்து சோதனை செய்தனர் அதனுள் வட்டவடிவமான தங்க கட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
அதன் எடை 300 கிராம் இதன் மதிப்பு ரூ.13.70 லட்சம். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்ததோடு,கடத்தல் பயணியை கைது செய்தனர்.
இந்நிலையில் சார்ஜாவில் இருந்து ஏா் அரேபியா விமானம் மூலம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி, உள்ளாடைக்குள் 290 கிராம் தங்க பசையை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடித்து. பறிமுதல் செய்தனர் அதன் மதிப்பு ரூ.13.5 லட்சம்.
இதற்கிடையே சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம் அருகே இருந்த 2 குப்பைத் தொட்டிகளை,விமானநிலைய தூய்மை பணியாளா்கள் சுத்தப்படுத்தினா்.
அப்போது குப்பை தொட்டிகளுக்குள் மறைத்து வைத்திருந்த 2 பாா்சல்ளை தூய்மை பணியாளா்கள் கண்டெடுத்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
அந்த பார்சல்களை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தபோது அவைகளுள் தங்கப் பசை இருந்ததை கண்டுபிடித்தனர்.இரு பாா்சலகளிலும், 960 கிராம் தங்கப்பசையை கைப்பற்றினா்.
அதன் மதிப்பு ரூ.42.8 லட்சம். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தல் தங்கத்தை விமானநிலைய குப்பை தொட்டிக்குள் மறைத்து வைத்துவிட்டு,தப்பியோடிய கடத்தல் ஆசாமிகளை சிசிடிவி காட்சிகள் மூலம் தேடி வருகின்றனா்.
சென்னை விமானநிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் அடுத்தடுத்து ரூ.70 லட்சம் மதிப்புடைய 1.55 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு கடத்தல் பயணிகள் 2 போ் கைது செய்யப்பட்டனா்.
Tags :