வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை
அம்பத்தூர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை, அம்பத்தூர், அயப்பாக்கம் சாலையில் உள்ள டி.ஜி.அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரத் சந்திரன் (74). இவரது மனைவிநிர்மலா (64). சரத் சந்திரனின் இளையமகன் சந்தோஷ்ராஜ் (30) திருமணமாகிப் பெற்றோர் வீட்டுக்கு அருகே வசித்து வருகிறார்.இந்நிலையில், சரத் சந்திரன் கடந்த5 நாட்களுக்கு முன்பு, காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை பகுதியில் உள்ள தன் மகள் வீட்டு சென்றுள்ளார். இதனால் வீட்டில் நிர்மலா தனியாக இருந்தார்.இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்மநபர்கள்கொலைசெய்து வீட்டிலிருந்த பொருட்களை திருடி சென்றுள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன
Tags :