3 பேரூராட்சிகளில் 3 தம்பதிகள் திமுக சார்பில் வெற்றி

by Editor / 23-02-2022 10:02:16am
 3 பேரூராட்சிகளில் 3 தம்பதிகள் திமுக சார்பில் வெற்றி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவில்  5 பேரூராட்சிகள் உள்ளன. இதில்  வேடசந்தூர், எரியோடு, பாளையம், வடமதுரை, அய்யலூர் ஆகிய 5 பேரூராட்சிகளை தி.மு.க வெற்றி பெற்று கைப்பற்றியுள்ளது. 
அதில் திமுக சார்பாக போட்டியிட்ட 3 தம்பதிகள் 3 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளனர். 
வேடசந்தூர் பேரூராட்சியில் திமுக நகர செயலாளர் கார்த்திகேயன் 12 வது வார்டில் போட்டியிட்டு 422 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரது மனைவி மேகலா 5 வது வார்டில் போட்டியிட்டு 294 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எரியோடு பேரூராட்சியில் முன்னாள் தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் ஜீவா 2-வது வார்டில் போட்டியிட்டு 313 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரது மனைவி மஞ்சுளா 4 வது வார்டில் போட்டியின்றி வெற்றி பெற்றார். வடமதுரை பேரூராட்சியில் திமுக நகர செயலாளர் மெடிக்கல் கணேசன் 14-வது வார்டில் போட்டியிட்டு 643 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரது மனைவி நிருபாராணி 10-வது வார்டில் 342 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றா

 3 பேரூராட்சிகளில் 3 தம்பதிகள் திமுக சார்பில் வெற்றி
 

Tags : 3 பேரூராட்சிகளில் 3 தம்பதிகள் திமுக சார்பில் வெற்றி

Share via