மதுரையில் சித்திரை திருவிழா - நன்கொடை அளிப்பவர்கள் கோவில் அலுவலகத்தில் நேரடியாக வழங்க வேண்டும்.

by Editor / 16-03-2022 05:38:54pm
மதுரையில் சித்திரை திருவிழா - நன்கொடை அளிப்பவர்கள் கோவில் அலுவலகத்தில் நேரடியாக வழங்க வேண்டும்.

மதுரை சித்திரைப் பெருவிழாவினை முன்னிட்டு நன்கொடையாளர்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்க விரும்பும் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள்,
மஞ்சள் கயிறு, குங்குமம் பாக்கெட்டுகள், மற்றும் இதர அனைத்து பொருட்களையும் திருக்கோயில் அலுவலகத்தில் நேரடியாக வழங்கி உரிய இரசீது பெற்று கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்பொருள் தொடர்பாக எந்த ஒரு தனி நபரிடமோ நிறுவனத்திடமோ    தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு யாரெனும் தனிப்பட்ட நபர்கள் அணுகினால், திருக்கோயில் நிருவாகத்திடம் புகார் அளிக்கவும். மேலும் 0452 ! 2349868, 2344360 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.கோவில் இணை ஆணையர் செல்லத்துரை அறிவிப்பு.

 

Tags : Chithirai Festival in Madurai - Donors should donate directly at the temple office.

Share via