ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை.

by Staff / 06-09-2023 02:08:42pm
ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை.

இரணியல் அருகே உள்ள மொட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தரம் (வயது 76). ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் ஆவார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். பாலசுந்தரம் சிறுநீரக கோளாறு, நெஞ்சுவலி, கால்வீக்கம் போன்ற பல நோய்களுக்கு திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். கடந்த ஒரு மாதமாக சரியாக தூக்கம் வரவில்லை என்று மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஏதோ விஷம் அருந்தி மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் ஆசாரிபள்ளம் மருத் துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அவரது மகன் ஜெயன் புகார் கொடுத்தார். அதன் பேரில் இரணியல் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

 

Tags :

Share via