கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை
சென்னை பூந்தமல்லி அருகே தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்த மாணவி நேற்று இரவு கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு கல்லூரி விடுதியில் உடனிருந்த மாணவிகள் இரவு படிப்பிற்காக சென்றுவிட்டனர். தனக்கு தலைவலிப்பதாக கூறி மாணவி விடுதியில் தனியாக இருந்தார். சிறிது நேரம் கழித்து உடன் தங்கி இருந்த மாணவிகள் வந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மாணவியின் தற்கொலை காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :