இலங்கை தமிழர்களை சட்டரீதியாக கையாள்வது குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்

by Staff / 24-03-2022 02:53:17pm
இலங்கை தமிழர்களை சட்டரீதியாக கையாள்வது குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியில் அங்குள்ள தமிழர்கள் தமிழகம் நோக்கி படையெடுக்கும் நிலையில் அவர்களை சட்டரீதியாக கையாள்வது குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி வருவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அவர் இலங்கை தமிழர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதாகவும் அவர்களுக்கு விரைவில் அடைக்கலம் கொடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறினார்.

மேலும் இந்தியாவில் தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக இருக்க வேண்டும் என நினைத்து பணியாற்றி வருவதாக அதற்கு தமது துபாய் பயணம் நிச்சயம் வழிவகுக்கும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via