100 ரூபாய் டிப்ஸ் பணத்துக்காக சக ஊழியரை கொண்ட நபர் கைது
சென்னையை அடுத்து திருவேற்காட்டில் டாஸ்மாக் பாரில் நபர் ஒருவர் கொடுத்த டிப்ஸ் பணத்தை பறிப்பதில் பார் ஊழியர்கள் இருவர் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவேற்காடு அடுத்த அடியில் உள்ள டாஸ்மாக் கடையை ஒட்டி செயல்பட்டுவரும் பாரில் மது அருந்த வந்த நபர் அங்கு வேலை செய்யும் முனிராஜ் முனி செல்வம் ஆகிய இருவருக்கும் நூறு ரூபாய் கொடுத்து பிரித்துக் கொள்ளும்படி கூறி சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் டிப்ஸ் பணத்தை முழுவதுமாக முனிராஜ் பயன்படுத்தியதாகவும் முனி செல்வத்தின் பங்கைப் பிரித்துக் கொடுக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த செல்வம் போதையில் வந்த முனிராஜ் தாக்கியதில் அவர் கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
Tags :