உடற்பயிற்சி கூடம் அமைக்க கொள்ளையடித்த கொள்ளையன் கைது

by Staff / 25-03-2022 01:58:46pm
உடற்பயிற்சி கூடம் அமைக்க கொள்ளையடித்த கொள்ளையன் கைது

திருப்பதியில் உடற்பயிற்சி கூடம் அமைப்பதற்காக 2 வீடுகளில் 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.

ஜாரளா நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஒரு வீட்டிலும் இந்த ஆண்டு மார்ச் 13ஆம் தேதி ஒரு வீட்டிலும் இருந்த தங்க ஆபரணங்கள் வெள்ளிப் பொருள்கள் ரொக்க பணம் ஆகியவை கதவை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டன.

இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையன் போன வீடுகளின் நண்பனாக வந்து சென்று கொண்டிருந்த சுரேஷ் பற்றி விசாரணை நடத்தியதில் இரண்டு வீடுகளில் கொள்ளை அடித்தது அவன் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவளது வீட்டில் இருந்து ஒரு கிலோ 280 கிராம் தங்க ஆபரணங்கள் 13 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

 

Tags :

Share via