செஞ்சி அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் வழக்கில் 10 பேர் கைது.

by Editor / 30-03-2022 08:13:00pm
செஞ்சி அருகே பள்ளி மாணவி கூட்டு பாலியல் வழக்கில் 10 பேர் கைது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள சிறு கிராமத்தில் தன் பெரியம்மாவின் வீட்டில் வசித்து வந்த  11-ம் வகுப்பு மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 4 மாதங்கள் கர்ப்பமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுதொடர்பான புகாரின் பேரில் மோகன் (32), மண்ணாங்கட்டி (எ) வெங்கடேசன் (77), இளையராஜா (28) ஆகிய மூவரை கடந்த ஜனவரி 9 ஆம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்தது, இந்நிலையில், அந்த மாணவியை மேலும் சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கியது.இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 5 பேர் வெங்கடேசன்(25), பிரபு(37), பாபு(22), சத்யராஜ்(28), பள்ளி மாணவியின் பெரியம்மா குப்பு(50)) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வந்த நிலையில் இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த பள்ளி மாணவியின் உறவினர்கள்  இரண்டு பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags : So far 10 people have been arrested in a case of gang rape of a school student near Ginger.

Share via