உணவு ஆலையில் சாலட் தயாரிப்புப் பிரிவில் தொடர் தீ விபத்து

by Staff / 16-04-2022 02:56:32pm
உணவு ஆலையில் சாலட் தயாரிப்புப் பிரிவில் தொடர் தீ விபத்து

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள உணவு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட மோசமான தீவிபத்தில் ரசாயன தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு 35 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலையில் தயாரிப்புப் பிரிவில் ஏற்பட்ட தீ நாலாபுறமும் பரவி கொழுந்துவிட்டு எரிந்து விண்ணை முட்டும் அளவுக்கு தீ வெளியேறிய தீயை போராடி வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு காற்றில் கலந்தது அடுத்து உடனடியாக அருகிலிருந்த 2,700 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர் மேலும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 35 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என உள்ளூர் அரசு நிர்வாகம் தடை அறிவித்துள்ளது.

 

Tags :

Share via