டெல்லியில் ஆட்டோ கார் ஓட்டுநர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தம்

by Staff / 18-04-2022 02:41:52pm
டெல்லியில் ஆட்டோ கார் ஓட்டுநர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தம்

இயற்கை எரிவாயு விலை உயர்வை கண்டித்து டெல்லி வாடகை ஆட்டோ கார் ஓட்டுநர்கள் இன்றும் நாளையும் இரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலை கடந்த ஒரு மாதத்தில் கிலோவுக்கு 30 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது புது டெல்லி ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் எரிவாயு விலையை குறைக்கவோ அல்லது கட்டணத்தை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினர். வேலைநிறுத்தத்தால் ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்களில் இருந்து வீட்டுக்குச் செல்வதற்கு ஆட்டோக்கள் இல்லாமல் பயணிகள் தவித்து வந்தனர்.

 

Tags :

Share via