8 மாத கர்ப்பிணி ஐ.டி.ஐ. மாணவி தற்கொலைக்கு முயன்றதில் குழந்தை இறந்து பிறந்தது.

by Editor / 14-12-2021 01:58:08pm
8 மாத கர்ப்பிணி ஐ.டி.ஐ. மாணவி தற்கொலைக்கு முயன்றதில் குழந்தை இறந்து பிறந்தது.

 

கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த சினிமா தொழிலாளி ஒருவரது 21 வயது மகள் கிண்டியில் உள்ள ஐ.டி.ஐ.- யில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.இவருக்கும் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.பின்னர் இதுவே அவர்களுக்குள்  காதலாக மாறியது.

இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர்.இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.இந்த நிலையில்சம்பவத்தன்று வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு இருந்த மாணவி திடீரென கீழே விழுந்துள்ளார்.அந்த சமயம் யாரும்தனை கவனிக்கவில்லை

இதில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு அங்கேயே பிரசவம் ஏற்பட்டுள்ளது. இதில் அவருக்கு ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது.இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது மாணவி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதையும் குழந்தை இறந்து பிறந்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்து பிறந்த குழந்தையின் உடல் அதே ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவியின் காதலன் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்த வடபழனி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
 

 

Tags :

Share via